Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எத்தனை வழக்குகள் போட்டாலும் திமுக.,வின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்: ஜெயக்குமார்

ஏப்ரல் 18, 2022 11:14

பெரம்பலூர்: ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் தி.மு.க.வை அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார் தெரிவித்தார்.

அரியலுாரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அ.தி.மு.க., உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் பேசியதாவது: கடந்த 2010ம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாடு தான் திருப்புமுனை ஏற்பட்டு, 2011ல் அ.தி.மு.க., ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தொடர்ந்து 10 ஆண்டுகாலம் அ.தி.மு.க.,வை யாராலும் வெல்ல முடியவில்லை. ஆனால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெறும் 3 சதவீத ஓட்டுகள் மட்டுமே கூடுதல் பெற்று, தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. இது நிலையான வெற்றி கிடையாது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

அவரது வழியில் ஒருங்கிணைப்பாளர்களும் செயல்பட்டனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள்ளாகவே அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு மேல் வழக்கு போட்டு வருகின்றனர். ஆனால், எத்தனை வழக்குகள் போட்டாலும் தி.மு.க.வின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது. தற்போது, தி.மு.க.,வினர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து உழைத்தால் வரக்கூடிய லோக்சபா தேர்தலில் நமக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். 2024ல் அ.தி.மு.க., தான் ஆளும் கட்சியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்