Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீர்வளத்துறை பயன்பாட்டுக்காக ரூ.6.82 கோடியில் 85 வாகனங்கள்

ஏப்ரல் 21, 2022 08:20


சென்னை: நீர்வளத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 6 கோடியே 82 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 5 மகிழுந்துகள், 80 ஜீப்புகளை வழங்கிடும் அடையாளமாக 10 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 6 கோடியே 82 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 5 மகிழுந்துகள் மற்றும் 80 ஜீப்புகளை வழங்கிடும் அடையாளமாக 10 வாகனங்களை வழங்கினார்.

2021-2022-ம் ஆண்டிற்கான நீர்வளத்துறை மானியக் கோரிக்கையில், நீர்வளத் துறையின் பயன்பாட்டில் இருந்து வரும் பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் 3 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், 2021-2022 ஆண்டில் 5 மகிழுந்துகள் மற்றும் 71 ஈப்புகள், 6 கோடியே 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 2022-2023 ஆண்டில் 40 ஈப்புகள், 3 கோடியே 30 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 2023-2024-ம் ஆண்டில் 40 ஜீப்புகள், 3 கோடியே 46 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 12 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாகனங்கள் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2021-2022-ம் ஆண்டில் 6 கோடியே 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 5 மகிழுந்துகள் மற்றும் 71 ஜீப்புகள் மற்றும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ், நீர்வளத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 68 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 9 ஜீப்புகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர்வளத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்