![](admin/uploads/.613485b6882e83.20288765.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: நெல்லை பழவூரில் பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசா, அபராதம் விதித்ததற்காக கழுத்தறுக்கப்பட்ட சம்பவம், கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழகம் சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையும், காவலர்கள் தங்களை தற்காத்து கொள்ள புதிய யுக்திகளை கையாளுவதற்கு பயிற்சிகளையும் அளிக்க வேண்டும் எனவும், இதற்கும் கமிட்டி போட்டு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவலரை காக்க வேண்டும் எனவும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.