![](admin/uploads/.6273bb604f9ff8.48424910.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: தமிழகம், மே.வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அனைத்து முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், தமிழகம், மேற்கு வங்கம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வரி குறைக்கப்படவில்லை. இங்கு வரி அதிகமாக உள்ளது.
இது அங்குள்ள மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதனால், அம்மாநில மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தேசிய நலன் கருதி வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.