![](admin/uploads/.6107bf03127b76.07677208.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: 'இசையமைப்பாளர் இளையராஜா பற்றி, ஜாதி வெறியுடன் பேசிய, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவைனை கைது செய்ய வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அடையாறை சேர்ந்தவர் மூர்த்தி. இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்: சமீபத்தில், இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றுக்கு முன்னுரிமை எழுதி இருந்தார். அதில், மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
இதை விமர்சனம் செய்வது போல, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன், ஈரோடு மாவட்டத்தில், பொது மேடையில் பேசியுள்ளார். 'தபேலா எடுத்து அடிக்கிறவன் எல்லாம் இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது. உணவுக்கு வழியில்லாமல் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்த நேரத்தில், கம்யூனிச சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவர்கள், பணமும், புகழும் வந்தவுடன், நாங்கள் உயர்ந்த ஜாதி என்கின்றரே... இது என்ன நியாயம்? வயது 80 ஆகிறது; ராஜாவாம், இளையராஜாவாம்...' என, பேசியுள்ளார்.
இந்த, 'வீடியோ'வை சமூகவலைதளத்தில் பார்த்து, அச்சமும், நடுக்கமும் அடைந்தேன். இளையராஜாவை, இளங்கோவன் ஜாதிய வன்மத்துடன் பேசியுள்ளார். இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, கலவரத்தை துாண்டக்கூடியது. இவரை, எஸ்.சி., - எஸ்.சி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.