Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்தியில் ஆட்சி அமைப்பதில் மாநில கட்சிகளின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்: பினராயி விஜயன்

மே 07, 2019 10:09

திருவனந்தபுரம்: காங்கிரஸ், பாஜக அல்லாத 3-வது அணியை உருவாக்குவதில் கடந்த சில ஆண்டுகளாக சந்திரசேகர ராவ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்களுடனும் அவர் பேசி வருகிறார். 

நேற்று அவர் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியிடம் தொலைபேசியில் பேசினார். அதனைத் தொடர்ந்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து தேசிய அரசியல் குறித்து விவாதித்தார்.

இந்நிலையில்,  திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்,

மூன்றாவது அணி குறித்து தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் என்னுடன் விவாதித்தார். தேசிய அரசியல் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. 

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. பெறாத நிலையில், மத்தியில் ஆட்சி அமைப்பதில் மாநில கட்சிகளின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். இந்த  சந்திப்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தாங்கள் விவாதிக்கவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்