Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை பேருந்து நிலையத்தில் மாணவிகள் மோதல்; கல்வித்துறை விசாரணை

மே 02, 2022 11:00

மதுரை : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் பள்ளி மாணவிகள் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவத்தில் நகரில் உள்ள இரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் குழுவாக மோதிக்கொண்டது தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் விசாரணை நடத்தி, மாணவிகளுக்கு மனநல கவுன்சிலிங் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சி.இ.ஓ., சுவாமிநாதன் கூறுகையில், "அனைத்து அரசு பள்ளிகளிலும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கொண்ட 'ஒழுங்கு நடவடிக்கை குழு'க்கள் செயல்படுகின்றன.இவை மாணவர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
 

தலைப்புச்செய்திகள்