Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பி.எப்.ஐ மோசமான இயக்கம்: கவர்னர் பேச்சு

மே 06, 2022 03:35

சென்னை: பி.எப்.ஐ எனப்படும் ‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' மிகவும் ஆபத்தான இயக்கம் எனவும் பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்படுவதாகவும் கவர்னர் ரவி பேசியுள்ளார். சென்னையில் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. இதனை ஏற்க முடியாது. ‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' (பி.எப்.ஐ) மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமை, அரசியல் - மாணவர் இயக்கம் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகவும் செயல்பட்டு வருகிறது என்று அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்