Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சூரில் பூரம் விழா

மே 09, 2022 12:45

திருச்சூர் : கேரளா மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், ஆண்டுதோறும் பூரம் திருவிழா, யானைகளின் அணிவகுப்பு, குடைமாற்றம் மற்றும் வாணவேடிக்கையுடன் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டுக்கான பூரம் திருவிழா இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான 'திருச்சூர் பூரம்' நாளை (10ம் தேதி) மாலை நடக்கிறது. இதையொட்டி, பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் யானைகளின் ஆடை ஆபரண அலங்காரப் பொருட்களின் கண்காட்சி நேற்று துவங்கியது. இதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.

தலைப்புச்செய்திகள்