Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனி விமானத்தில் நேற்று கோவை வந்தார்.கோவை விமான நிலையத்தில் அவரை, கலெக்டர் சமீரன், போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார், ஐ.ஜி., சுதாகர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.விமான நிலையத்தில் இருந்து கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு, துணை ஜனாதிபதி சென்றார்.
ஹெலிகாப்டரில் ஊட்டி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், மோசமான வானிலை காரணமாக, அந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.எனவே, இன்று அவர் ஊட்டி செல்வார் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஊட்டி ராஜ் பவன் மற்றும் வெலிங்டன் ராணுவப்பயிற்சி கல்லுாரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில், துணை ஜனாதிபதி பங்கேற்கிறார்.