Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சரக்கு ரயிலில் ரேஷன் அரிசி வந்தது

மே 18, 2022 03:36

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேஷன் அரிசி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது.  நேற்று தஞ்சாவூரில் இருந்து 1,250 டன் ரேசன் அரிசி வந்திருந்த நிலையில் இன்று தெலுங்கானாவில் இருந்து 42 வேகன்களில் 3,400 டன் ரேசன் அரிசி சரக்கு ரெயில் மூலமாக நாகர்கோவிலுக்கு வந்தது.  ரேசன் அரிசியை சரக்கு ரெயிலில் இருந்து தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். ரேசன் அரிசியை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்