![](admin/uploads/.5ef99a70e5ca46.24047152.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புது டெல்லி : பொதுத்துறை நிறுவனமான 'பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்' நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக விற்க, மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், பி.பி.சி.எல்., நிறுவனத்தை முழுமையாக வாங்க, யாரும் முன்வரவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தின் 20 - 25 சதவீத பங்குகளை மட்டும் தற்போதைக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாக, பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எல்.ஐ.சியின் பொதுப்பங்குகள் சமீபத்தில் விற்கப்பட்ட நிலையில், தற்போது பி.பி.சி.எல் நிறுவனத்தையும் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.