Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஊட்டி: ஊட்டி படகு இல்லத்தில், சுற்றுலா கழகம் சார்பில், கோடை கலை விழா நடந்தது.நீலகிரி மாவட்டத்தில், கோடை விழா மே 7ல் துவங்கி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டி படகு இல்லத்தில், கோடை கலைவிழா நேற்று நடந்தது. இதில், பரத நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.தொடர்ந்து, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், சுற்றுலா தொடர்பான கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.ஊட்டியில் நேற்று மழை பெய்த போதும், ஏரியில் படகு சவாரி செய்வதில் பயணிகள் ஆர்வம் காட்டினர்.