Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீரர் முதுகில் ஏறிச் சென்ற எம்.எல்.ஏ.

மே 20, 2022 01:48

கவுகாத்தி: மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற பா.ஜ. - எம்.எல்.ஏ. தன் கால் தண்ணீரில் நனையாமல் மீட்பு படை வீரர் முதுகில் ஏறிச் சென்றது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு சில நாட்களாக கனமழை கொட்டுகிறது. நேற்று வரை ஆறு லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில் லும்டிங் தொகுதி பா.ஜ. - எம்.எல்.ஏ. சிபு மிஸ்ரா நேற்று ஹோஜாய் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியை பார்வையிட வந்தார். அப்பகுதியில் கணுக்கால் அளவுக்கே தண்ணீர் தேங்கியிருந்தது.இருந்தும் அவர் மீட்புப் படை வீரர் ஒருவரின் முதுகில் ஏறி படகிற்கு சென்றார். மீட்பு படை வீரர் அவரை முதுகில் தூக்கிச் செல்லும் 'வீடியோ' சமூக வலைதளத்தில் பரவியது. அவரது செயலுக்கு ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்