Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாம்பரம் - செங்கல்பட்டு 3வது ரயில் பாதை: பிரதமர் துவக்கி வைக்கிறார்

மே 23, 2022 01:30

சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது பாதை, மதுரை - தேனி அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தை, வரும் 26ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 386 கோடி ரூபாய் செலவில், 30 கி.மீ., துாரம் மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்து, பயணியர் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை - போடிநாயக்கனுார் இடையே, 450 கோடி ரூபாய் செலவில், 98 கி.மீ., மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், மதுரை - தேனி வரை அகல ரயில் பாதை பணி முடிந்து, அதிவேக ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், 26ம் தேதி மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, இவற்றை துவக்கி வைக்கிறார்.

தலைப்புச்செய்திகள்