Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சொத்து தகராறில் போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதல்வர் வீட்டில் சோதனை நடத்தியதில் அது புரளி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து வெடிகுண்டு விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி என்ற பகுதியிலிருந்து அந்தோணி ராஜ் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும் அவர் குடிபோதையில் மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது. இதனையடுத்து, ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு ஆரோக்கியராஜ் கைது செய்து விசாரணை நடத்தினர்.