Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டி?

மே 08, 2019 07:39

உத்திரபிரதேசத்தில் உள்ள அமேதி, கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இரு தொகுதிகளிலிம் அவரை தோற்கடிக்க கங்கணம் கட்டியிருக்கிறார் பிரதமர் மோடி. அதற்காக பல அஸ்திரங்கள் ஏவப்பட்டிருக்கிறது. 

மோடியின் அந்த அஸ்திரங்களை முறியடித்து இரு தொகுதிகளிலும் தனது சகோதரர் ராகுல் காந்தியை வெற்றிபெற வைக்கும் அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளார் பிரியங்கா காந்தி. இரு தொகுதிகளிலும் ராகுல் வெற்றிப் பெற்றால் எந்த தொகுதியை ராஜினாமா செய்வார் என்கிற கேள்விகள் காங்கிரஸ் தொண்டர்களிடம் பலமாக விவாதிக்கப்படுகிறது. 

இது குறித்து டெல்லி காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, "அமேதி தொகுதியைத்தான் ராஜினாமா செய்வார் ராகுல். அந்த தொகுதிக்கு வரும் இடைத்தேர்தலில் பிரியங்காவை போட்டியிட வைத்து அவரை ஜெயிக்க வைப்பார் ராகுல். இது தான் காங்கிரஸ் தலைமையிடம் இருக்கும் அஜெண்டா " என்கின்றன டெல்லி தகவல்கள்.

தலைப்புச்செய்திகள்