![](admin/uploads/.5d831707789323.81436920.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
போபால்: மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பைனா கிராமத்தில் உள்ள துணை அஞ்சலக அலுவலகத்தில் தபால்காரராக பணியாற்றி வந்த விஷால் அஹிர்வார், கடந்த 20-ம் தேதி போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில், அப்பகுதியில் 24 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் அஞ்சல டிபாசிட் பணம் ரூ.1 கோடியை போலி ஆவணங்கள் மூலம் கையாடல் செய்துள்ளதும், அந்த பணத்தை ஐ.பி.எல்., சூதாட்டத்தில் பயன்படுத்தியதும் தெரியவந்தது. அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.