Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணமக்களுக்கு முதல்வர் வாழ்த்து

மே 26, 2022 03:16

சென்னை: சென்னை திரு.வி.க. நகர் காமராஜர் மாநகராட்சி  திருமண மண்டபத்தில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து  ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு சவரன் தங்க தாலி மற்றும் 33 பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்பை முதலமைச்சர் வழங்கினார்.

திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மிகவும் பாழடைந்து கிடந்த மாநகராட்சி மண்டபத்தை நான் தான் சீரமைத்தேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மண்டபம் புனரமைப்புக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை போராடி வாதாடி வென்றோம். மக்களின் கோரிக்கையை ஏற்று மண்டபத்தை புதுப்பித்து காமராஜர் மண்டபம் என பெயர் வைத்தோம். மணமக்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ வேண்டும்.  அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்