Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 46 ஓட்டுப்பதிவு மையங்களில் தவறு நடந்துள்ளதாக கூறியுள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, அங்கு மறு ஓட்டுப்பதிவு நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் எனக்கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 46 ஓட்டுப்பதிவு மையங்களில் வைக்கப்பட்ட இயந்திரங்களில் தவறு நடந்துள்ளது. அங்கு தேர்தல் அன்று, மாதிரி வாக்குப்பதிவு முறையாக நடக்கவில்லை. அப்போது சில அதிகாரிகள் தவறு செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து, உடனடியாக தலைமை ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். இங்கு மறு ஓட்டுப்பதிவு நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்கும்.
மறு ஓட்டுப்பதிவு நடத்தினால், அதற்கு தயாராக இருக்கவே ஓட்டு இயந்திரம், தேனிக்கும், ஈரோட்டிற்கும் கொண்டு செல்லப்பட்டது. 13 மாவட்டங்களில் தேனி, ஈரோட்டில் மட்டும் தான் இயந்திரங்கள் பற்றாக்குறை உள்ளது. மறுஓட்டுப்பதிவு குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு சாஹூ கூறினார்.