![](admin/uploads/.5cdfe32a09dc79.87432592.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கூடலூர்: கோடை மழை கைகொடுத்ததால் முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் வைகை அணை கடந்த ஓராண்டாக 60 அடிக்கு மேல் நீடித்து வந்தது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தண்ணீர் திறப்பு 1500 மற்றும் 1000 கன அடியாக குறைக்கப்பட்டது.
தற்போது மூல வைகையாற்றுப்பகுதியில் மழை இல்லாததால் வைகை அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லை. மேலும் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1072 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 68 கன அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 63.68 அடியாக சரிந்துள்ளது.
மழை கைகொடுத்தால் மட்டுமே அடுத்த மாதம் 5 மாவட்ட விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132.20 அடியாக உள்ளது. 371 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சாளாறு அணையின் நீர்மட்டம் 38.70 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.80 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 1, தேக்கடி 22 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.