Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விமான நிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் ரெடி

மே 30, 2022 11:51

சென்னை : சென்னை விமான நிலையத்தின் முன்பகுதியில் கட்டப்பட்டுள்ள, அடுக்கு மாடி வாகன நிறுத்த பணிகள் முழுமையாக முடிந்து, ஜூன் இரண்டாம் வாரம் சோதனை ரீதியான பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை விமான நிலையத்தின் முன்பகுதியில், 3.36 லட்சம் சதுர மீட்டரில், 250 கோடி ரூபாயில், அடுக்கு மாடி வாகன நிறுத்தம் மற்றும் வணிக வளாகங்கள், முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வு அறைகள் கட்டும் பணி, 2019ல் துவங்கியது.

இந்த பணிகள் முழுமை யாக முடிந்து, திறப்புக்கு தயாராக உள்ளது. ஆறு அடுக்கு கொண்ட இந்த வளாகத்தில், 2,200 கார்களை நிறுத்த முடியும். இந்த வாகன நிறுத்தம், ஜூன் இரண்டாம் வாரம் சோதனை ரீதியாக பயன்பாட்டுக்கு வருகிறது.இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:அடுக்கு மாடி வாகன நிறுத்தம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணி முடிந்து விட்டது. வளாகத்திற்குள் வாகனங்கள் செல்வதற்கான சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி ஒரு வாரத்தில் முடிவடையும்.வாகன நிறுத்தம், ஜூன் இரண்டாவது வாரம் சோதனை ரீதியாக செயல்பாட்டுக்கு வருகிறது. இங்கு வாகனங்களை நிறுத்தி விட்டு, மேம்பாலம் வழியாக விமான நிலைய முனையத்திற்கு நடந்து செல்லலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

தலைப்புச்செய்திகள்