![](admin/uploads/.5f87f65d68b1f6.39550292.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஸ்ரீபெரும்புதுார்:பொதுமக்கள் பயணிக்க இலவச ஆட்டோ வசதியை ஆதனுார் ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியத்தில் ஆதனுார் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள ஒன்பது வார்டுகளில் 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த மக்கள் அருகே உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லை. தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வழியே, நீலமங்கலம் செல்லும் அரசு பேருந்தில் ஆதனுார் மக்கள் பயணித்து வந்தனர்.
பொதுமக்கள் போக்குவரத்து வசதிக்காக ஆதனுார் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் ஏழு ஆட்டோக்கள் வாங்கப்பட்டுள்ளன. பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஆட்டோவின் பின் இருக்கையில் அமர்ந்து நான்கு பேர் பயணிக்க முடியும்.இந்த ஆட்டோக்கள் ஆதனுார் ஊராட்சிக்குட்பட்ட டி.டி.சி., நகர், ஏ.வி.எம்.நகர், லட்சுமிபுரம், ஆதனுார் கிராமம் உள்ளிட்ட நான்கு இடங்களில் இருந்து ஊரப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு புறப்படுகிறது.
காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரையும், மாலை 4:30 முதல் 8: 30 மணி வரையும் இயக்கப்படுகிறது. ஆதனுார் ஊராட்சியை சேர்ந்த மக்கள் தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையை நகலை ஊராட்சி மன்றத்தில் கொடுத்தால், ஆட்டோவில் பயணிப்பதற்கான அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டையை காட்டி மக்கள் இலவசமாக பயணிக்கலாம்.