Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீர் தொடர் கொலைகள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை

ஜுன் 03, 2022 08:22

புதுடில்லி: காஷ்மீரில் சமீப காலமாக சில பிரிவினரை குறி வைத்து நடந்து வரும் கொலைகள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் இன்று அவசர ஆலோசனை நடத்தினார் கடந்த ஒருவாரத்தில் பயங்கரவாதிகள் சிறுபான்மையினரை கொலை செய்து வருகின்றனர். ஆசிரியை, வங்கி மேலாளர், பண்டிதர், தொழிலாளி என கடந்த 3 நாட்களில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து உள்துறை அமைச்சர் டில்லியில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ராணுவ தலைமை ஜெனரல் பாண்டே, தேசிய பாதுகாப்பு செயலர் அஜீத் தோவல், காஷ்மீர் கவர்னர், காஷ்மீர் டிஜிபி உள்துறை மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், ரா பிரிவு படை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்