Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவிட் தொற்று ஒரே நாளில் 113 பேர் பாதிப்பு

ஜுன் 03, 2022 08:52

சென்னை : சென்னையில் கோவிட் தொற்று நேற்றை விட சற்று அதிகரித்ததால், ஒரே நாளில் 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூன் 3) 14,061 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 81; செங்கல்பட்டில் 11; காஞ்சிபுரம் 4; திருவள்ளூர் 5; கோவையில் 3; திருநெல்வேலி 2; திருச்சி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், மற்றும் தென்காசியில் தலா ஒருவரையும் சேர்த்து 113 பேருக்கு தொற்று உறுதியானது.

தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,55,871 ஆக அதிகரித்துள்ளது. இன்று 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,17,090 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கோவிட் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.
சென்னையில் குடும்ப தொற்று காரணமாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்றவர்களில் 68 பேர் குணமடைந்தனர். மருத்துவமனைகளில் 756 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்