Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதக்கலவரத்தை துாண்டுபவர்கள் மீது நடவடிக்கை: எஸ்.பி.,யிடம் புகார்

ஜுன் 04, 2022 02:01

ராமநாதபுரம்:ஊர்வலம் என்ற பெயரில் மதக்கலவரத்தை துாண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என ராமநாதபுரம் தாலுகா யாதவர் வர்த்தக சங்க தலைவர் எம்.பாலமுருகன் தலைமையில் ராமநாதபுரம் எஸ்.பி., கார்த்திக்கிடம் மனு அளிக்கப்பட்டது.
அதில் தெரிவித்துள்ளதாவது:மதுரையில் வெங்கடேசன் எம்.பி., தலைமையில் மே 29ல் கம்யூ., வி.சி., திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் செஞ்சட்டை ஊர்வலம் நடத்தினர்.அதில் ஹிந்து கடவுள்களை இழிவு படுத்தி கோஷமிட்டனர்.அவர்களின் செயல்பாடு ஹிந்து மக்களிடையே பெரும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மதக்கலவரத்தை துாண்டும் வகையிலும் ஊர்வலம் ஏற்பாடு செய்தவர்கள், கலந்து கொண்டவர்கள், கோஷமிட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளனர்.மனு நகலை பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சர் அலுவலகம், தமிழக முதல்வர் அலுவலகத்திற்கும் அனுப்பியுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்