Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் முழுவதும் 10,12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி

ஜுன் 04, 2022 02:03

காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி துவங்கி, மே 31 வரை நடைபெற்றது. இந்நிலையில், அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கியுள்ளது. அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், விக்டோரியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி காஞ்சிபுரத்திலும், பத்மா சுப்ரமணியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாங்காட்டிலும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.அதேபோல், 10ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூர் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்து வருகின்றன. இதில், ஒவ்வொரு மையத்திலும் 400 முதல் 500 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்