Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மயிலாடுதுறை திருவாரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஆய்வு பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி இன்று அதிகாலை மயிலாடுதுறைக்கு வந்தடைந்த அறநிலையத்துறை அமைச்சர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தை வந்தடைந்தார். ஆதீனத்தின் முன்பு அமைச்சர் சேகர்பாபு வுக்கு பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து ஆதீன திருமடத்தில் தருமபுரம் ஆதீனத்தின் அறநிலை துறை அமைச்சர் சந்தித்து ஆசி பெற்றார்.
தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஆதினத்தின் சார்பில் 25 அறைகளுடன் கட்டப்படுள்ள ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருள் நிலைய விருந்தினர் மாளிகையை அறநிலையத்துறை அமைச்சர் திறந்து வைத்து ஆதீன வளாகத்தில் இருபத்தி ஏழு ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த பயணத்தின்போது அமைச்சருடன் அறநிலையத்துறை ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் வந்தனர்.