![](admin/uploads/.636cb46a588387.15962355.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விழுப்புரம் : 'பிரதமர் மோடி எட்டு ஆண்டு ஆட்சியில் ஒரு ஊழல் கூட நடக்கவில்லை' என பா.ஜ., மாநில துணைத் தலைவர் சம்பத் கூறினார். விழுப்புரத்தில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது:பிரதமர் மோடி பதவியேற்று, எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த எட்டு ஆண்டுகளில் பா.ஜ., ஆட்சியில் ஒரு ஊழல் கூட இல்லை. ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் நடந்த காங்., ஆட்சியில், எதற்கு எடுத்தாலும் ஊழல் மட்டுமே இருந்துள்ளது.பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்காக துாய்மை இந்தியா திட்டம், ஜன்தன் திட்டம், காப்பீட்டு திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
36 ஆண்டுகளாக இருந்த பழைய கல்விக் கொள்கையை மாற்றி, புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு திருடு போன 228 சுவாமி சிலைகளை மீட்டுள்ளார்.ஒவ்வொரு நாட்டு பிரதமர் மற்றும் அதிபர்கள், மோடியின் நிர்வாக திறமையை பார்த்து அச்சப்படுகின்றனர். அம்பேத்கருக்கு 5 இடங்களில் நினைவு மண்டபம் அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காக 650 சாதனைகளை மோடி செய்துள்ளார். இவ்வாறு சம்பத் கூறினார்.மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.