Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

3 நாட்களில் 45 ஆயிரம் பேர் மலர் கண்காட்சியை பார்வையிட்டனர்

ஜுன் 06, 2022 01:57

சென்னை: சென்னை மலர் கண்காட்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெற்றது. கடந்த 3 நாட்களில் 45 ஆயிரம் பேர் மலர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி கடந்த ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்தது. கலைவாணர் அரங்கில் 3 ஆம் தேதி தொடங்கிய மலர் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றது. இந்த மலர் கண்காட்சியில் ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் போன்ற இடங்களில் இருந்து சுமார் 200 வகை மலர்கள் கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. சென்னை மலர் கண்காட்சி நுழைவுக் கட்டணமாக மாணவர்கள் ரூ.20-ம், பெரியவர்கள் ரூ.50-ம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற மலர் கண்காட்சியை 45,000 பேர் பார்வையிட்டுள்ளனர். இனி ஆண்டுதோறும் இதே நாட்களில் மலர்க்கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைப்புச்செய்திகள்