Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திட்டக்குடி : திட்டக்குடி அருகே, தி.மு.க., கவுன்சிலரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 50; தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர். இவர் நேற்று மதியம் தன் உறவினர் செல்வராஜ், 58, என்பவருடன், 'மாருதி சுசுகி பிரெஸ்ஸா' காரில், கொரக்கை கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் நடந்த காதணி விழாவுக்கு சென்றார். கோவிலில் இருந்த அதே ஊரைச் சேர்ந்த பா.ம.க., முன்னாள் ஒன்றிய செயலர் கண்ணன், ராம்குமார் ஆகியோருக்கும், சங்கருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தோர், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.விழா முடிந்து சங்கர், செல்வராஜ் காரில் ஆலம்பாடி அருகே சென்றபோது, கண்ணன், ராம்குமார் இருவரும் வழிமறித்தனர்.கட்டையால் கார் கண்ணாடியை உடைத்து, சங்கர், செல்வராஜை தாக்கினர். படுகாயமடைந்த சங்கர், செல்வராஜ் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இருதரப்பு புகாரின்படி,ராமநத்தம் போலீசார் தனித்தனியே வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.