![](admin/uploads/.5d62a9cedf8770.81361521.jpg)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி :சேவியர் கல்லூரியில் பல்வேறு முறைகேடுகளை கண்டித்துபேராசிரியர்கள் விடிய விடிய கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி சேவியர்கலைக்கல்லூரியில் மாணவர்சேர்க்கையில் முறைகேடு,பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைகளைபின்பற்றாமல் முதல்வர் மற்றும்துறைத்தலைவர்களை நியமிப்பதுஅரசின் அனுமதியின்றி கல்லூரிசெயலரை நியமித்தல் உள்ளிட்டபல்வேறு முறைகேடுகளை கண்டித்து பேராசிரியர்கள் நீண்டகாலமாகபோராடி வருகின்றனர்.
மாவட்ட கலெக்டர் அறிவித்த குழு விசாரணைமேற்கொண்டும் இன்னும் அறிக்கைதாக்கல் செய்யவில்லை. இதனால் மேல் நடவடிக்கை இல்லை. எனவே கல்லூரிகள் கல்வி நிர்வாகம், உயர்கல்வித் துறையினர் சேவியர் கல்லூரிமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாலை முதல் பேராசிரியர்இருதயராஜ் தலைமையில் 32 பேர் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மூட்டா சங்கத்தினர் கல்லூரிக்கு வெளியேகூடியுள்ளனர். பகலில் மாணவர்களும்பாடம் நடத்துவது மாலை முதல் விடியவிடிய கல்லூரி வளாகத்தில் அமர்ந்து
போராட்டத்தில் ஈடுபடுவது என பேராசிரியர்கள் முடிவெடுத்துள்ளனர்.