Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்ட ரகளையை முறுக்கு தின்றபடியே  ரசித்த சசிகலா!

ஜுன் 24, 2022 06:55

சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட காட்சிகளை, முறுக்கு தின்றபடியே, 'டிவி'யில் பார்த்து ரசித்துள்ளார் சசிகலா.

அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. பன்னீர்செல்வம் வந்தபோது, அவருக்கு எதிராக, பொதுக்குழு உறுப்பினர்கள் பலத்த கோஷம் எழுப்பினர்.

'வேண்டும் வேண்டும் ஒற்றை தலைமை வேண்டும்; துரோகி பன்னீர்செல்வம் வெளியேறு' என்றெல்லாம் கோஷம் எழுப்பினர். பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

'ஸ்டாலினை சந்தித்த ரவீந்திரநாத்திற்கு கட்சியில் இடமில்லை' என்று கூச்சலிட்டனர். மேலும் மேடையில், 'பன்னீர்செல்வம் வழிமொழிந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படும்' என, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதும், கூட்டத்தில் சலசலப்பும், கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது. 

இதனை வீட்டில் 'டிவி' முன் அமர்ந்து, முறுக்கு ருசித்து சாப்பிட்டபடியே, இந்த காட்சிகளை சசிகலா ரசித்துள்ளார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்