Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெகத்ஸ் கஸ்பர் மீது போலீசில் புகார்

ஜுலை 02, 2022 09:32

சென்னை : ஜெகத் கஸ்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., சிறுபான்மையினர் அணி மாநில தலைவராக இருப்பர் டெய்ஸி தங்கையா. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்: சென்னையில், ஜூன் 19ல் நடந்த சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டு இயக்கம் நடத்திய கூட்டத்தில், விடுதலை புலிகள், கிறிஸ்தவ மிஷனரிகள் ஆதரவாளரான ஜெகத் கஸ்பர் ராஜ் பேசுகையில், 'முஸ்லிம்கள் மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் ஒன்றுபட்டு தனி நாடு கோர வேண்டும்' என, தேசத்திற்கு விரோதமாக பேசியுள்ளார்.

நம் நாட்டு மக்களை பிளவுப்படுத்தும் நோக்கத்திலும், மக்களிடம் வன்முறையை துாண்டும் விதத்திலும் தொடர்ந்து அவர் பேசி வருகிறார். இவர், மக்களிடம் தீய எண்ணங்களை விதைத்து வருகிறார். நாட்டை துண்டாட, தேச விரோத சக்திகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

இந்திய இறையாண்மைக்கும், தேச ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் விதத்தில், வன்முறையை துாண்டி, தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். ஜெகத் கஸ்பர் ராஜ் மீது, தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்  என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்