Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவையில் படிப்படியாக உயரும் கொரோனா

ஜுலை 10, 2022 05:41

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் நேற்று 1603 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 109 பேர் புதுவையை சேர்ந்தவர்கள், காரைக்காலில் 18 பேரும்,ஏனாமில் 2 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 மாகியில் தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை. தற்போது 10 பேர் மருத்துவமனையிலும், 821 பேர் வீட்டு தனிமையிலும் என ஒட்டு மொத்தமாக 831 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 

புதுவையில் நாள்தோறும் படிப்படியாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. இன்று 83 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதில் 82 பேர் புதுவையையும், ஒருவர் காரைக்காலையும் சேர்ந்தவர்கள் ஆவர். 

புதுவையில் இதுவரை 1 லட்சத்து 67 ஆயிரத்து 660 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 867 பேர் குணமடைந்துள்ளனர். 1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

 புதுவை மாநிலத்தில் இதுவரை 17 லட்சத்து 56 ஆயிரத்து 53 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்