![](admin/uploads/.5c8f2eed9ef151.34519881.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திண்டுக்கல் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார். அதில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான நத்தம் விசுவநாதனுக்கு துணைபொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனால் திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாவட்ட கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் தலைமையில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட அண்ணாதொழிற்சங்க செயலாளர் முத்தையா, இணைச்செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சின்னு, சரவணன், கணேசன், செந்தில், கமலக்கண்ணன், தாயாரம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.