Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவிட் பாதிப்பு 21 ஆயிரமாக அதிகரிப்பு

ஜுலை 21, 2022 01:15

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,566 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,566 பேருக்கு தொற்று உறுதியானது. 

இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,38,25,185 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 18,294 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,31,50,434 ஆனது. தற்போது 1,48,881 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் காரணமாக 45 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25,870 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 200.91 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 29,12,855 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்