Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில்  குறைந்து வரும் கொரோனா பாதிப்பு...!

ஜுலை 25, 2022 02:02

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 866 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இது நேற்று முன்தின பாதிப்பான 21 ஆயிரத்து 441 மற்றும் நேற்றைய பாதிப்பான 20 ஆயிரத்து 279-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.

 கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 18 ஆயிரத்து 148 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 28 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது.

 அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 202 கோடியே 17 லட்சத்து 66 ஆயிரத்து 615 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்