Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பல்லடம் வட்டாரத்தில் வீட்டுமனை வரன்முறைபடுத்துதல் சிறப்பு முகாம்

ஜுலை 29, 2022 08:40

பல்லடம் : பல்லடத்தில் உள்ள கிராம ஊராட்சிகளான சித்தம்பலம், அனுப்பட்டி,கே.கிருஷ்ணாபுரம், வடுகபாளையம்புதூர், பணிக்கம்பட்டி ஊராட்சிகளில் கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் 20ந்தேதிக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட தனிமனைகளை வரன்முறைப்படுத்துதல் சிறப்பு முகாம் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில் 50 மனுக்களுக்கு உரிய கட்டணம் செலுத்தியதை ஆய்வு செய்து அவர்களுக்கு வரன் முறை அனுமதி வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன், பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஊராட்சி செயலாளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்