Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறை மரணங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்

ஜுலை 31, 2022 11:13

சென்னை: தமிழக போலீஸ் துறைக்கு கவுரவமிக்க ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதி கொடியை வழங்கினார். இந்த சிறப்பு கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

தமிழக காவல்துறைக்கு மிக உயரிய ஜனாதிபதி சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது, காவல்துறைக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே பெருமையாகும். உயிரை பொருட்படுத்தாமல் தமிழக காவல்துறை ஆற்றிய சேவைக்கு இது அங்கீகாரம். பல மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக காவல்துறை விளங்குகிறது.

அகில இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை தமிழக காவல்துறை குவித்து வருகிறது. காவல்துறை மீது மக்கள் நன்மதிப்பை வைத்துள்ளார்கள். தமிழக காவல்துறை குற்றங்களை குறைக்கும் துறையாக இல்லாமல் குற்றமே இல்லாத துறையாக இருக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்,

தமிழ்நாட்டில் சிறை மரணங்களே இல்லாத நிலையை ஏற்படுத்தி தர வேண்டும். போக்சோ வழக்குகளில் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கவலையின்றி பணியாற்றும் சூழலை அமைத்துத்தர இந்த அரசு தயாராக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்