Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குரங்கம்மை தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு

ஆகஸ்டு 03, 2022 12:24

புதுடெல்லி, குரங்கம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை: *குரங்கம்மை பாதிக்கப்பட்ட நபரை முதலில் தனிமை படுத்த வேண்டும் *சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசர் உபயோகித்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் .

குரங்கம்மை பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும் *சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்காக கிருமிநாசினியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக் கூடாதவை: *குரங்கு அம்மை நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கைகள், துண்டுகளை பிறர் பகிர்ந்து கொள்ள கூடாது. *குரங்கு அம்மை நோயாளிகளின் துணிகளை துவைக்க வேண்டாம். குரங்கம்மை அறிகுறி தெரிந்தால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது *குரங்கு அம்மை நோய் குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.
 

தலைப்புச்செய்திகள்