Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விண்ணில் நாளை  பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட்

ஆகஸ்டு 06, 2022 10:41

சென்னை;  இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது.அதில் பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 1,860 கிலோ வரையிலும்; ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட், 4,000 கிலோ வரையிலும் உடைய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் உடையவை.

தற்போது இஸ்ரோ, 'மைக்ரோ, நானோ' என, 500 கிலோ வரை உடைய செயற்கைக்கோளை சுமந்து செல்லும் வகையில், எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும், 'ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள்' ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

இதன் செலவு, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்களின் செலவுகளை விட குறைவு.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து முதலாவது எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட், 'இ.ஓ.எஸ்., - 02, ஆசாதிசாட்' ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தபடி, நாளை காலை, 9:18 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

அதில், 145 கிலோ எடை உடைய, 'இ.ஓ.எஸ்., - 02' செயற்கைக்கோள் பூமியை கண்காணிக்க கூடியது. மேலும், 8 கிலோ, 'ஆசாதிசாட்' செயற்கைக்கோளானது, கிராமங்களில் உள்ள, 75 பள்ளிகளை சேர்ந்த மாணவியர் உருவாக்கிய மென்பொருளை உள்ளடக்கியது.

தலைப்புச்செய்திகள்