Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று ஒவ்வோர் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவோம் ரஜினிகாந்த் அழைப்பு

ஆகஸ்டு 13, 2022 06:55

இந்தியாவில் வரும் 15ம்தேதி சாதி மத கட்சி வேறுபாடு இல்லாமல் நாம எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு தேசியக் கொடியைக் கட்டி பெருமைப்படுவோம். – ரஜினிகாந்த் ஒவ்வோர் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவோம் என்று கூறி நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்பதற்கேற்ப வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக்கொடி பறக்க விடப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையேற்று பொதுமக்களும், பிரபலங்களும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், அனைவரும் தங்களது வீட்டில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்