![](admin/uploads/.5e909cc65556f2.17324462.jpg)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை-மத்திய அரசின் நிபந்தனை காரணமாகவே, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டிய நிலை இருப்பதாக, மக்களுக்கு மின் வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
4,500 பேர் கருத்துதமிழக மின் வாரியம் சமர்ப்பித்துள்ள மனுக்களின் அடிப்படையில், மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்கும் கட்டணங்களை உயர்த்த, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. அம்மனுக்கள் மீது மக்களிடம் கருத்து கேட்டு, அதற்கு பதில் அளிப்பதுடன், அந்த விபரங்களை சேர்த்து சமர்ப்பிக்குமாறு, மின் வாரியத்திற்கு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.அதன்படி, மனுக்களை இணையதளத்தில் வெளியிட்ட மின் வாரியம், ஒரு மாதத்திற்கு மேல் கருத்து கேட்டு வந்தது.
இதற்கான அவகாசம் இம்மாதம், 24ம் தேதியுடன் முடிந்தது. தபால், இணையதளம், நேரடியாக என, மொத்தம் 4,500 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மின் வாரியம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.வினியோக முறைஅதில் இடம்பெற்றுள்ள விபரங்கள்:தமிழக மின் வாரியம், 'உதய்' திட்டத்தில் இணைந்தாலும், தொடர்ந்து இழப்பையே சந்தித்துள்ளது. இதன் வாயிலாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மத்திய அரசின் மின் துறை வழிகாட்டுதலின்படி, வினியோக முறையை வலுப்படுத்தும் திட்ட நிதியை பெற, மின் கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்பது நிபந்தனை. கட்டண திருத்தம் செய்யப்படா விட்டால், மின் வாரியத்திற்கு, 10 ஆயிரத்து 793 கோடி ரூபாய்க்கான மானியங்கள் வழங்கப்படாது. எனவே, மின் கட்டணத்தை, எட்டு ஆண்டு இடைவெளிக்கு பின் உயர்த்துவதை தவிர, வேறு வழியில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.