Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரம்பலூர் அருகே லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து.. ஓட்டுநர், நடத்துனர் உயிரிழந்த பரிதாபம்

செப்டம்பர் 14, 2022 03:03

பெரம்பலூர் அருகே லாரி மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் மட்டும் நடத்துனர் இருவரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி, தீரன் நகர் பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து, நேற்று மாலை சென்னை சென்று விட்டு மீண்டும் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன்(40) என்பவர் ஓட்டி வந்தார். உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன்(56) என்பவர் நடத்துனராக இருந்துள்ளார். பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புறப்பட்ட அந்த பேருந்து சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள எறையூர் சின்னாறு பகுதியில் இன்று காலை வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் வேகமாக மோதியது.

தலைப்புச்செய்திகள்