Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காலாண்டு தேர்வு: 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 8-ந் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

செப்டம்பர் 21, 2022 03:38

சென்னை: அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 8-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பி உள்ள சுற்றறிக்கை கூறியிருப்பதாவது:- தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 6 முதல் 8-ந் தேதி வரை ஒன்றிய அளவில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

எனவே அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் முதல் பருவ தேர்வான காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 8-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அக்டோபர் 6 முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வர வேண்டும். இதை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்