Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.20 இருந்தால் நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் சாப்பிடலாம்: உயர்நீதிமன்றம்

செப்டம்பர் 29, 2022 07:42

மதுரை : ரூ.20 இருந்தால் நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்திவிடலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஸ்ரீ வில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு வனபகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல ரூ.20 வசூலிக்கப்படுவதற்கு தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவு: வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாமே.
ரூ.20 இருந்தால் நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்திவிடலாம்
வனப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளையும் கடைமைகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர், வனத்துறை போலீசார் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்