Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

செப்டம்பர் 29, 2022 08:04

சென்னை : அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்ஃப்ளூயன்ஸா தொற்று காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 
அவருக்கு கொரோனா மற்றும் டெங்கு பரிசோதனை செய்த நிலையில் இரண்டுமே இல்லை என்பது தெரியவந்தது. இந்த நிலையில் இரத்தப் பரிசோதனை மேற்கொண்டபோது,  இன்ஃப்ளூயன்ஸா தொற்று மட்டும் பாதிப்பை ஏற்படுத்தியதால், அதற்கு மட்டும் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்துவிட்டதால் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், அவர் வீடு திரும்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அவர் சில நாட்கள் ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்