![](admin/uploads/.629f4d043fd0f0.62438616.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல் : நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மAKP.சின்ராஜ் தலைமையில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் வெண்ணந்தூர் வட்டாரத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயது வரையுள்ள ஆண், பெண் இருபாலருக்கும் தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா (DDUGKY), ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI), தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC), பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா (PMKVY), மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் (TAHDCO) ஆகிய துறைகள் இணைந்து 30.09.2022 இன்று ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு அருகில் உள்ள கஸ்தூரிபா காந்தி மருந்தியல் கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழா நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு திறன் பயிற்சிகளுக்கான ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக பயிற்சி அலுவலர் மற்றும் உதவி திட்ட அலுவலர் மற்றும் கஸ்தூரிபா காந்தி மருந்தியல் கல்லூரியின் தாளாளர் திரு.சிதம்பரம் அவர்களும் கலந்து கொண்டனர்.