Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை விமான நிலையத்தில் பல லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

அக்டோபர் 11, 2022 06:06

சென்னை,

 மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர்.

 அப்போது மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஷர்மிளா நாகமுத்து என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த 3 எமர்ஜென்சி விளக்குகளை சோதனை செய்தனர். 

அதில் தங்க தகடுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். எமர்ஜென்சி விளக்குகளில் இருந்து 24 தங்க தகடுகளை எடுத்தனர். மொத்தம் அவரிடம் இருந்த ரூ. 79 லட்சத்தி 44 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 808 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஷர்மிளா நாகமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

தலைப்புச்செய்திகள்